Monday, April 11, 2011

DMDK Supporter Ashokan Murdered by DMK Supporter in Dharmapuri 11.04.2011

Share

தர்மபுரி : தர்மபுரியில் தே.மு.தி.க., கிளை செயலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பென்னகரம் பர்வனதஅல்லி தே.மு.தி.க., கிளைச் செயலாளர் அசோகன் ( 27). இவரது வீட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் சின்னம் வரையப்பட்டிருந்தது. எதிர் வீட்டில் இருப்பவர் தி.மு.க., வைச் சேர்ந்த சேகர் (30). இவரது வீட்டு சுவரில் தி.மு.க., சின்னம் வரையப்பட்டிருந்தது.

போலீசார் சுவரில் இருக்கும் கட்சி சின்னங்களை அழிக்குமாறு உத்தரவிட்டனர். இதனையடுத்து தே.மு.தி.க., பிரமுகர் அசோகன், அவரது வீட்டு சுவரில் இருந்த கட்சி சின்னத்தை அழித்தார். ஆனால் தி.மு.க., பிரமுகர் சின்னத்தை அழிக்கவில்லை. இது குறித்து அசோகன் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து சின்னத்தை உடனடியாக அழிக்குமாறு சேகரிடன் வலியுறுத்தினர்.

தங்கள் கட்சி வேட்பாளர் இன்பசேகரன் வந்து சென்ற உடனே சுவர் சின்னத்தை அழித்து விடுவதாக கூறினார் சேகர். இது தொடர்பாக நேற்றிரவு அசோகனுக்கும், சேகருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. சேகர் உட்பட 10 பேர் சேர்ந்து அசோகனை கட்டையால் தாக்கினர்.

படுகாயமடைந்த அசோகன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ‌பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டு செல்லப்பட்ட போது வழியி‌லேயே இறந்தார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சேகரை கைது செய்துள்ளனர்.
Monday, April 11, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “DMDK Supporter Ashokan Murdered by DMK Supporter in Dharmapuri 11.04.2011”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint