Monday, July 25, 2011

Veerapandi Arumugam Land grabbing row: More trouble for DMK

Share

Senior DMK leader and former minister Veerapandi Arumugam on Monday (July 25) surrendered before the Salem police for three-day custodial interrogation in connection with two cases of alleged land grabbing lodged against him.

Arumugam surrendered before the district crime branch police at 10 am following a directive from the Madras high court on July 22, police said.

The former agriculture minister is listed as accused No 1 in two cases of land grabbing, one in which he allegedly evicted over 23 people from a colony in the district to take over the land and the other involving property worth over Rs 85 crore in the area.

The second case against Arumugam and 12 others was filed under various IPC Sections including 147 (punishment for rioting) besides Tamil Nadu Public Properties Damages Act 1994.

In his July 22 order, Justice G Rajasuria said Arumugam should be produced before the Salem Judicial Magistrate on July 27.

The judge said for obtaining bail, the former DMK minister should secure two sureties and a bond for Rs 25,000.

On July 19, three persons were arrested in Salem in connection with the two cases.

-------------------------------------

சேலம்: நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இன்று ஆஜரானார்.

2 நில அபகரிப்பு புகார்களில் சிக்கியுள்ள வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த 2 வழக்குகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு சரணடைய வேண்டும் என்று நீதிபதி ராஜசூர்யா உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து ஆறுமுகம் இன்று காலை சேலம் டவுனில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக கோவையில் நடந்த தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்து சரணடைந்தார். அங்கு அவரிடம் விசாரணை தொடங்கியது.

அங்கு, ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் காரணமாக குற்றப் பிரிவு அலுவலகம் அமைந்துள்ள பஜார் பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9.30 மணி வரை அந்த வழியே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு இருந்தது. 9.30 மணிக்கு மேல் கன்னிகாபரமேசுவரி கோவிலில் இருந்து கோட்டை மாரியம்மன் கோவில் வரை போலீசார் போக்குவரத்தை நிறுத்தி விட்டனர். அம்மாபேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் பொன்னம்மாபேட்டை, அணைமேடு வழியாக திருப்பி விடப்பட்டன.

வீரபாண்டி ஆறுமுகத்தை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் அவர் தொடர்ந்து 3 தினங்கள் போலீஸ் காவலிலேயே இருப்பார்.

அவரிடம் மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் பிச்சை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தவுள்ளனர். விசாரணை விவரங்களை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வர்.

6 மணி நேரத்துக்கு ஒருமுறை அவரது உடல்நிலையைப் பரிசோதித்து சிகிச்சை வழங்க மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவரை சேலம் 5வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அப்போது அவர் ரூ. 25,000 சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் அளித்து வெளியில் வரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள வீடுகள், சேலம் சாரதா கல்லூரி சாலையில் உள்ள பிரிமியர் ரோலர் மாவு மில்லின் நிலம் ஆகியவற்றை ஆக்கிரமித்ததாக ஆறுமுகம் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 2 வழக்குகளிலும் வீரபாண்டி ஆறுமுகம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
Monday, July 25, 2011 by deivam P Mohanraj · 0

0 Responses to “Veerapandi Arumugam Land grabbing row: More trouble for DMK”

Post a Comment

All Rights Reserved deivam PMR | Blogger Templates by Bloggermint